திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og
திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
அருப்புக்கோட்டையை சேர்ந்த வேல் பாண்டியன் தனது குடும்பத்தினருடன் சென்னை, வேளச்சேரியில் தனது உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர், சென்னையில் இருந்து காரில் அருப்புக்கோட்டைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இவர்கள் வந்த கார், திண்டிவனம் அடுத்த கன்னிகாபுரம் அருகே இன்று (அக். 31) அதிகாலை 5 மணிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது மோதியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக