வெவ்வேறு இடங்களில் பேரவை, தலைமை செயலகம், உயர் நீதிமன்றம்; ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள்: அரசின் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பிஸ்வபூஷண் ஒப்புதல் https://ift.tt/3hWWAKN
ஆந்திராவில் 3 தலைநகரங்கள் செயல்படுவதற்கான சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பிஸ்வபூஷண் ஹரிசந்தன் நேற்று ஒப்புதல் அளித்தார். இதன்படி அமராவதியில் சட்டப்பேரவை, விசாகப்பட்டினத்தில் தலைமைச் செயலகம், கர்னூலில் உயர் நீதிமன்றம் செயல்படும்.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம், ஆந்திரா, தெலங்கானா என இரண்டாக பிரிக்கப்பட்டது. அதன்பிறகு விஜயவாடா - குண்டூர் இடையே ஆந்திராவின் புதிய தலைநகரை அமைக்க கடந்த சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 33 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை அரசுக்கு வழங்கினர். இப்பகுதிக்கு ‘அமராவதி’ என பெயர் சூட்டப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக