கரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்குச் சரியான நேரத்தில் ஊதியம் தாருங்கள்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் https://ift.tt/2CW1rgE
கரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு உரிய காலத்தில் ஊதியம் கிடைப்பதை உறுதி செய்யுங்கள். மருத்துவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்ட காலத்தை விடுப்பாகக் கருத முடியாது என்றால் அதை மாநில அரசுகளிடம் கூறி நடைமுறைப்படுத்துங்கள் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, திரிபுரா ஆகிய மாநிலங்கள் கரோனா போரில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு முறையாக ஊதியம் வழங்குவதில்லை. எங்களின் உத்தரவுகளை மாநில அரசுகள் பின்பற்றுவதில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக