ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க கரசேவையில் இறந்த சகோதரர்கள் குடும்பத்துக்கு அழைப்பு https://ift.tt/3k7jJwb

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த இளம் சகோதரர்கள் ராம்குமார் கோத்தாரி (21) மற்றும் சரத்குமார் கோத்தாரி (19). இவர்கள் கடந்த 1990-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி அயோத்தியில் விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) நடத்திய கரசேவையில் கலந்து கொள்ள அயோத்தி சென்றிருந்தனர். இக்கரசேவைக்கு அப்போதைய ஜனதா தளம் கட்சியின் உத்தர பிரதேச முதல்வர் முலாயம் சிங் தடை விதித்திருந்தார்.

தடையை மீறி பாபர் மசூதி வளாகப் பகுதியில் ஒரு பறவைபறந்தாலும் சுட்டுத் தள்ளுவதாகவும், அங்கு எந்த மசூதியையும் இடிக்க அனுமதிக்க முடியாது என்றும் முதல்வர் முலாயம் எச்சரித்திருந்தார். இதற்காக அப்போது அயோத்தி செல்வதற்கான போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டிருந்தன. இதனால் ஆஸம்கர் வரை ரயிலில் வந்தவர்கள் அங்கிருந்து 2 தினங்கள் நடந்து அயோத்தி சேர்ந்தனர். உத்தர பிரதேச போலீஸ் பாதுகாப்புகளையும் மீறி பாபர் மசூதியின் முக்கிய உச்சிப் பகுதியில் ஏறியவர்கள் அங்கு விஎச்பியின் காவிக்கொடியை கட்ட முயன்றனர். அப்போது கோத்தாரி சகோதரர்களை போன்ற கரசேவையினர் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD