இலங்கைக்குப் படகில் கடத்த முயன்ற 1,700 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்; மண்டபம் பகுதியை சேர்ந்த மூவர் கைது https://ift.tt/3b92k1S
படகு மூலம் இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ.1.36 கோடி மதிப்பிலான 1,700 கிலோ கடல் அட்டைகளை இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்து, சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய கடலோர காவல் படையின் தூத்துக்குடி நிலையத்தைச் சேர்ந்த கடலோர காவல் படை வீரர்கள், அபிராஜ் என்ற ரோந்து கப்பலில் நேற்று (ஆக.29) மன்னார் வளைகுடா பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் சந்தேகமான வகையில் நாட்டுப் படகு ஒன்று சென்று கொண்டிருந்ததை கடலோர காவல் படையினர் கண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக