அத்வானி பங்களிப்பை மறக்க முடியாது: கர்நாடக முதல்வர் எடியூரப்பா கருத்து https://ift.tt/3cJEZEE
கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து லக்னோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை முழு மனதுடன் வரவேற்கிறேன்.
இந்த நாள் மிகவும் புனிதமான நாளாக மாறியுள்ளது. ராம ஜென்ம பூமிக்காக போராடிய எல்லா போராளிகளுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. தனிப்பட்ட முறையில் இந்த போராட்டத்தில் நான் தொடர்ந்து பங்கெடுத்துள்ளேன். அந்த நாட்கள் என் வாழ்நாளுக்கு உண்மையான அர்த்தம் அளித்தன. போராளிகளுக்கு ஒவ்வொரு வெற்றியும் புதிய உத்வேகத்தை அளிக்கும். இந்த தீர்ப்பின் மூலம் உண்மை வென்றுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக