ஜெர்மனியில் கரோனா பாதிப்பு 5 லட்சத்தைக் கடந்தது
ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 19,059 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது.
இதுகுறித்து ராபர்ட் கோட்ச் ஆராய்ச்சி நிறுவனம் கூறும்போது, “ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 19,059 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெர்மனியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,18,753 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை 10,452 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக