பெண் வேட்பாளரை அவதூறாகப் பேசியதற்காக கமல்நாத்தை மக்களே மன்னிப்பு கேட்கவைப்பார்கள்: பாஜக தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா https://ift.tt/34HTo1J
பெண் வேட்பாளரை அவதூறாகப் பேசியதற்காக மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தை மக்களே மன்னிப்பு கேட்கவைப்பார்கள் என்று பாஜக தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் டப்ரா சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தொகுதியில் பாஜக சார்பில் இமர்தி தேவி போட்டியிடுகிறார். இத்தொகுதியில நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசிய கமல்நாத், பாஜக வேட்பாளர் இமர்தி தேவியைத் தரக்குறைவாகப் பேசியதால் சர்ச்சை ஏற்பட்டது. இதற்குப் பாஜக தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். தேசிய மகளிர் ஆணையமும் கமல்நாத்துக்குக் கண்டனம் தெரிவித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக