விவசாயிகள் போராட்டத்தால் டெல்லியில் தொடர்ந்து பதற்றம் அமித் ஷா வேண்டுகோளை ஏற்க மறுப்பு: பேச்சுவார்த்தைக்கு அதிகாரம் படைத்த அமைச்சர்கள் குழுவை நியமிக்க வலியுறுத்தல் https://ift.tt/36liQuV
விவசாயிகள் போராட்டத்தால் டெல்லியில் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வேண்டுகோளை ஏற்க மறுத்துள்ள விவசாய சங்கங்கள், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அதிகாரம் படைத்த அமைச்சர்கள் குழுவைநியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாக கூறி 3 புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு கடந்த செப்டம்பரில் இயற்றியது. இந்த சட்டங்கள், விவசாயிகளின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். ஆனால், இந்த சட்டங்களில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள், முழுக்க முழுக்க பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், தங்கள் நலனுக்கு எதிராக இருப்பதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டினர். குறிப்பாக, விளைபொருட்களுக்கான ஆதார விலை நிறுத்தப்படும் என அச்சம் தெரிவித்தனர். அதை மத்திய அரசு மறுத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக