விவசாயிகளைத் தீவிரவாதிகளைப் போல் மத்திய அரசு நடத்துகிறது: சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு https://ift.tt/36oNkfL
வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை தீவிரவாதிகளை நடத்துவதுபோல் மத்திய அரசு நடத்துகிறது. அவர்களை டெல்லிக்குள் வரவிடாமல் தடுக்கிறது என்று சிவசேனா கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரியும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் டெல்லி சலோ என்ற பெயரில் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கியுள்ளார்கள்.. டெல்லியை நோக்கி ஹரியானா, பஞ்சாப், உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள்,விவசாய சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லிக்கு படையெடுத்துள்ளார்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக