செங்கோட்டையில் வன்முறையில் ஈடுபட்ட 5 பேரின் அடையாளம் தெரிந்தது https://ift.tt/2MBUMwp
புதுடெல்லி: கடந்த 26-ம் தேதி டெல்லியில் குடியரசு தின விழா நடைபெற்றபோது, புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது பல்வேறு இடங்களில் விவசாயிகள் போலீஸ் தடுப்புகளை தாண்டி அத்துமீறினர். போலீஸார் மீது டிராக்டர்ளை மோதும் வகையில் வேகமாக ஓட்டினர். கத்தி, வாளை காட்டி மிரட்டி போலீஸாரை விரட்டினர். மேலும் வரலாற்றுசிறப்புமிக்க செங்கோட்டையில் குவிந்து அங்குள்ள கொத்தளத்தில் தேசிய கொடியை அகற்றிவிட்டு சீக்கியர்களின் கால்சா கொடியை ஏற்றினர். டிராக்டர் பேரணியில் நடைபெற்ற வன்முறையில் சுமார் 400-க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர். விவசாயிகளின் அத்துமீறல்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய சுமார் 1,700-க்கும் வீடியோக்கள் மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகளை டெல்லி போலீஸார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக இதுவரை 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி செங்கோட்டையில் கால்சா கொடியேற்றியவர்கள், அத்துமீறல்களில் ஈடுபட்ட 5 பேரை டெல்லி போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்கள் 5 பேரின் மீதும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. செங்கோட்டை பகுதியில் நுழைந்த வாகனங்களின் பதிவு எண் மூலம் அவர்கள் அடையாளம் காணப்பட்டு விசாரணை நடத்தப்படும். தவறிழைத்தவர்கள் அனைவரும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என்று டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக