கிருஷ்ணகிரி அருகே நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்னால் ஆம்னி கார் மோதி விபத்து: 6 பேர் பலி; 3 பேர் படுகாயம் https://ift.tt/3pDCNnM
கிருஷ்ணகிரி அருகே நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்னால் ஆம்னி கார் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த 8 பேர் பெங்களூரிலுள்ள ஒன்டர்லா சுற்றுலாத் தளத்திற்கு ஆம்னி கார் மூலம் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் வாகனம் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே வந்துகொண்டிருந்தபோது, தேசிய நெடுஞ்சாலை ஓரம் நின்ற அரசுப் பேருந்தில் இருந்து இறங்கிய தேவராஜ் என்பவர் சாலையைக் கடக்க முயன்றபோது அவர் மீது மோதியது. மேலும், ஆம்னி கார் கட்டுப்பாட்டை இழந்து நின்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக