போலீஸாரை தாக்கிய வழக்கில் தெலங்கானா பாஜக எம்எல்ஏ.வுக்கு ஓராண்டு சிறை தண்டனை https://ift.tt/3rjN8pJ
தெலங்கானா மாநிலம், கோஷாமஹால் தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜாசிங். கடந்த 2015 டிசம்பரில் ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழக வளாகத்தில் மாட்டு இறைச்சி உண்ணும் விழாவுக்கு மாணவர் சங்கத்தினர் ஏற்பாடு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராஜாசிங் தனது ஆதரவாளர்களுடன் அங்கு செல்ல முயன்றார்.
இதையடுத்து தடையை மீறி பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைய முயன்றதாக ராஜாசிங்கை போலீஸார் கைது செய்தனர். அவரை செகந்திரபாத்தில் உள்ளபொல்லாரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். அவர்களைசந்திக்க அனுமதிக்காததால் போலீஸாரை ராஜாசிங் தாக்கியதாக கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக