கன்னியாஸ்திரிகளை கேள்வி கேட்க என்ன உரிமை இருக்கிறது? -பாஜகவுக்கு பிரியங்கா காந்தி கேள்வி https://ift.tt/3wduWkM
கன்னியாஸ்திரிகளை கேள்வி கேட்கவும், அவர்களின் டிக்கெட்டுகளை ஆய்வு செய்யவும் பாஜகவின் இளைஞர் அமைப்புக்கு என்ன உரிமை இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
உ.பி.யில் ஜான்ஸி நகரில் கேரளாவைச் சேர்ந்த இரு கன்னியாஸ்திரிகள் ரயிலில் வந்தபோது, அவர்களை ரயிலில் இருந்த ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த சிலர் கீழே இறக்கிவிட்டனர். கட்டாய மதமாற்றத்துக்காக இரு பெண்களை அழைத்துச் செல்கிறார்கள் எனக் கூறி போலீஸில் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் புகார் செய்தனர். இந்த புகாரையடுத்து, விசாரணை நடத்திய போலீஸார் கன்னியாஸ்திரிகள் மீது எந்தத் தவறும் இல்லை என அவர்களை அனுப்பி வைத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக