மக்களின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும்போது அரசியல் செய்ய வேண்டாம்: காங்கிரஸுக்கு அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி வேண்டுகோள் https://ift.tt/3t2lcab
மக்களின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும்போது அரசியல் செய்ய வேண்டாம். மத்திய அரசு கரோனாவுக்கு எதிராகப் போராடுகிறது; காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைப் போல் மோசமான அரசியல் செய்யவில்லை என மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "மக்களின் வரிப்பணம் மருந்து நிறுவனங்கள் கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கக் கொடுக்கப்பட்டது. இப்போது அரசாங்கம் அதே மக்களை தடுப்பூசி மருந்துகளுக்கு உலகிலேயே அதிக விலை கொடுக்க வைக்கிறது. மீண்டும் சிஸ்டம் தோல்வியடைந்துவிட்டது. மக்கள் ஏமாற்றப்பட்டனர். மோடியின் தோழர்களுக்கு லாபம்" என ட்வீட் செய்திருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக