கரோனா தொடர்பாக இணையதளத்தில் உதவி கேட்கும் மக்கள் மீது நடவடிக்கை கூடாது; வழிபாட்டுத் தலங்களில் சிகிச்சையளியுங்கள் : உச்ச நீதிமன்றம் காட்டம் https://ift.tt/3xDBqdt
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்கள் இணையதளத்தில் உதவி கோரி ஏதேனும் தகவலைப் பதிவிட்டால் அவர்களின் குரலை நசுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கக்கூடாது, அது வதந்தி என்று முன்முடிவுக்கு வரக்கூடாது என்று மத்தியஅரசுக்கு உச்ச நீதிமன்றம் காட்டமாகத் தெரிவித்துள்ளது.
நாட்டில் கரோனா 2-வது அலை அதிவேகமாகப் பரவி வருகிறது. நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மூச்சுத் திணறலால் அவதிப்படுவோருக்குத் தேவையான மருத்துவ ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக