பெண்கள் பல ஆண்களை மணக்கலாம்: தென்னாப்பிரிக்காவில் புதிய மசோதாவால் சர்ச்சை

தென்னாப்பிரிக்காவில் பெண்கள் பல மணம் செய்வதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கும் மசோதாவை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மசோதா பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
தென்னாப்பிரிக்காவில் ஆண்கள் பல பெண்களை திருமணம் செய்து கொள்ள சட்டப்பூர்வமாக அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த நாட்டில் 2-வது திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஆண்கள் நீதிமன்றத்தை அணுகி முறைப்படி அனுமதி பெறலாம். அடுத்தடுத்த திருமணங்களுக்கும் இதேபோல அனுமதி பெற முடியும். தன்பாலின திருமணத்துக்கும் தென்னாப்பிரிக்காவில் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக