முஸ்லிம் பெண்கள் உரிமை நாளாக ஆகஸ்ட் 1ம்தேதி அனுசரிப்பு: முத்தலாக் தடை சட்டத்தின் 2-வது ஆண்டு தொடக்கம்: மத்திய அரசு அறிவிப்பு https://ift.tt/3C2t0P2
முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கும் முத்தலாக் முறையை ஒழிக்க மத்திய அரசால் இயற்றப்பட்ட முத்தலாக் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டு இன்றுடன் 2- ஆண்டுகள் நிறைவடைகிறது . இதனால் ஆகஸ்ட் 1ம்தேதியை முஸ்லிம் பெண்கள் உரிமை நாளாக நாடுமுழுவதும் கடைபிடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
முஸ்லிம் சமூகத்தில் திருமணமான பெண்களிடம் மூன்றுமுறை தலாக் கூறி விவகாரத்து செய்யும் முறை நடைமுறையில் இருந்துவந்தது. இதை சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது. ஆனால், எந்த மாற்றமும் நிகழவில்லை, சிறு காரணங்களுக்காக வாட்ஸ்அப், தொலைப்பேசி மூலம் முத்தலாக் சொல்வது தொடர்ந்து வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக