பாகிஸ்தானுக்கு இந்தியா தகுந்த பதிலடி: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி https://ift.tt/2WDLzJo
சண்டிகரில் அமைந்துள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் காணொலி வாயிலாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
கடந்த 1965, 1971-ம் ஆண்டுகளில் நடைபெற்ற போர்களில் பாகிஸ்தான் தோற்கடிக்கப்பட்டது. போரில் இந்தியாவை எதிர்கொள்ள முடியாது என்பதால் மறைமுக போரில் பாகிஸ்தான் ஈடுபட்டிருக்கிறது. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. அனைத்து சதிகளையும் இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்து வருகிறது. ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக