ஜீன்ஸ் ஆடையில் பசையாக பூசி தங்கத்தை நூதன முறையில் கடத்தியவர் கேரளாவில் கைது https://ift.tt/3yphXwc
இரண்டு அடுக்கு ஜீன்ஸ் பேன்ட்-க்கு இடையில் தங்கத்தை பசையாக பூசி, நூதன முறையில் கடத்தி வந்தவரை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் கண்ணூர் விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் நேற்று காலையில் பயணிகளிடம் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையிலான பயணி ஒருவரை சோதனையிட்டனர். இதில் அவர் 2 லேயர் துணியால் தைக்கப்பட்டிருந்த ஜீன்ஸ் அணிந்திருந்தது தெரியவந்தது. மேலும் அந்த ஜீன்ஸில் ஒரு துணிக்கும் மற்றொரு துணிக்கும் இடையில் தங்கத்தை பசையாக பூசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக