திருமலையில் ரூ.300 தரிசன டிக்கெட் கள்ளச் சந்தையில் விற்பனை: தேவஸ்தான ஊழியர் உட்பட 6 பேர் மீது வழக்கு https://ift.tt/3mdC8Jn
ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டை 5 ஆயிரம் வீதம், 7 டிக்கெட்டுகள் ரூ.35 ஆயிரத்திற்கு பக்தர்களுக்கு விற்றதாக திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர், வங்கி ஊழியர் உட்பட 6 பேர் மீது திருமலை போலீஸார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது தினமும் சுமார் 22 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை தரிசித்து வருகின்றனர். இதில் 8 ஆயிரம் பேர் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துகொண்ட பக்தர்களாவர். மேலும் 8 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலம் சர்வ தரிசன டோக்கன்களை முன்பதிவு செய்துகொண்டவர்கள். இது தவிர, விஐபி பிரேக், வாணி அறக்கட்டளை டிக்கெட் மற்றும் சிபாரிசின் பேரில் ரூ.300 டிக்கெட்டுகளை பெற்று ‘சுபதம்’ வழியாக விரைவாக தரிசனம் செய்யும் பக்தர்கள் 6 ஆயிரம் பேர் உள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக