காபூலுக்குப் பயணிகள் விமானப் போக்குவரத்து; இந்தியாவுக்குத் தலிபான்கள் கோரிக்கை: மத்திய அரசு ஆலோசனை https://ift.tt/3ik33SO
ஆப்கன் தலைநகர் காபூல் நகருக்குப் பயணிகள் விமான சேவையைத் தொடங்குங்கள் என இந்திய விமானக் கட்டுப்பாட்டு இயக்குநகரத்துக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்கள் தலைமையிலான அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதியோடு காபூல் நகருக்கு இந்தியா சார்பில் பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. இந்தச் சம்பவத்துக்குப் பின் காபூல் விமான நிலையம் மூடப்பட்டது. இந்நிலையில் கடந்த 5-ம் தேதி உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கியது. கடந்த 13-ம் தேதி சர்வதேச விமானப் போக்குவரத்து தொடங்கியது. பாகிஸ்தான் அரசு முதன்முதலில் ஆப்கனுக்கு விமான சேவையைத் தொடங்கியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக