கர்நாடகாவில் மேலும் 33 மாணவர்களுக்கு கரோனா https://ift.tt/3d5Bbi3
கர்நாடகாவில் கடந்த ஒரு வாரத்தில் தார்வாட் மருத்துவக்கல்லூரி, மைசூரு நர்சிங் கல்லூரி, பெங் களூருவில் நர்சிங் கல்லூரி மற்றும் சர்வதேச உறைவிடப் பள்ளி ஆகியவற்றில் படிக்கும் மாணவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பரவியது. இதில் பாதிக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், ஹாசன் மாவட்டம் குமரனஹள்ளியில் உள்ள மொரார்ஜி தேசாய் விடுதியில் தங்கியிருந்த பள்ளி மாணவர்கள் 26 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, 26 மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாணவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட 500 பேருக்கு நேற்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக