ட்விட்டர் புதிய சிஇஓவின் வயது 37: உலகின் டாப் 500 நிறுவன தலைமைச் செயல் அதிகாரிகளில் மிகவும் இளமையானவர்
ட்விட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வாலுக்கு 37 வயதுதான் ஆகிறது. இதனால், உலகளவில் டாப் 500 நிறுவனங்களின் சிஇஓக்களிலேயே மிகவும் இளைமையானவர் என்ற அந்தஸ்தைப் பராக் அகர்வால் பெற்றுள்ளார்.
சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டரை பிரபலங்கள் பலரும் உலகளவில் பயன்படுத்தி வருகின்றனர். முக்கிய தகவல் பரிமாற்ற தளமாகவும் ட்விட்டர் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ட்விட்டர் சிஇஓ பதவியை ஜேக் டார்ஸி நேற்று ராஜினாமா செய்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக