அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு பெயரில் அரசு வேலைக்கான நேர்முக தேர்வை போலியாக நடத்தி ரூ.1.5 கோடி மோசடி: 8 பேர் கும்பலை கைது செய்த சென்னை போலீஸார் https://ift.tt/3qrzulj
சென்னை: அகில இந்திய தொழில் நுட்ப கல்விக்குழு பெயரில் அரசு வேலைக்கான நேர்முகத் தேர்வை போலியாக நடத்தி ரூ.1 கோடியே 50 லட்சம் மோசடி செய்ததாக 8 பேர் கும்பலை சென்னை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அகில இந்திய தொழில் நுட்ப கல்விக்குழுவின் பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்தி மதுரை, கோயம்புத்தூர், காஞ்சிபுரம் மற்றும் சேலம் போன்ற இடங்களில் ஆட்களை வேலைக்குத் தேர்வு செய்வதாக சென்னையில் உள்ள அகில இந்திய தொழில் நுட்ப கல்விக் குழுவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அதன் தென் மண்டல அலுவலர் ஆர்.சுந்தரேசன் இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் புகார் அளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக