ஊராட்சி மன்ற தலைவியின் கணவரை கொலை செய்த இளைஞர் சிக்கினர் https://ift.tt/3EFMR6N
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரிய கொம்மேஸ்வரம் கிராம ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ஷோபனா. இவரது கணவர் கோவிந்தராஜ் (38). வீரவர் கோயில் பகுதியில் டி.வி பழுது நீக்கும் கடை நடத்தி வந்தார். இவர், கடந்த 22-ம் கடையில் இருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான வெங்கடேசன் (27) என்பவர் கொலை செய்துவிட்டு தப்பினார்.
இதுகுறித்து ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த தப்பிஓடிய வெங்கடேசனை தேடி வந்தனர். இதற்காக, ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தலைமறைவாக இருந்த அவரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக