வேலூர்: 2-வது திருமணம் செய்த ஆட்டோ ஓட்டுநர் கைது https://ift.tt/Ncnfphx7y
வேலூர் அடுத்த கத்தாழம்பட்டு அண்ணா நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (33). ஆட்டோ ஓட்டுநர். இவருக்கும், இந்துமதி (32) என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தை தொடர்ந்து வரதட்சணை கேட்டு மனைவியை சந்தோஷ்குமார் கொடுமை செய்துள்ளார் என கூறப்படுகிறது. இதனால், கணவரை பிரிந்த இந்துமதி, விரிஞ்சிபுரம் அருகேயுள்ள கம்மவார் பாளையம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இதற்கிடையில், இந்துமதிக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை சந்தோஷ்குமார் ரகசியமாக திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக