26-வது ஆண்டு பாதயாத்திரையாக திருப்பதி வந்த தமிழக பக்தர்கள் திருப்பி அனுப்பிவைப்பு https://ift.tt/3nW7WnD

திருப்பதி: வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா கே. வலசை கிராமத்தை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆண்டுதோறும் திருப்பதி ஏழுமலையானுக்கு மஞ்சள் ஆடை உடுத்தி விரதம் மேற்கொண்டு பாதயாத்திரையாக திருமலைக்கு வந்து, சுவாமியை தரிசித்து நேர்த்தி கடன் செலுத்துவது வழக்கம்.

இதுபோல் இவர்கள் கடந்த 26 ஆண்டுகளாக பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இம்முறை ஆன்லைனில் 150 சர்வ தரிசன டிக்கெட்டுகள் மட்டுமே கிடைத்தது. ஆயினும், சிலர் தேவஸ்தான அதிகாரிகளிடம் கூறி சுவாமியை தரிசித்து விடலாம் எனும் நம்பிக்கையில் கடந்த 22-ம் தேதி புறப்பட்டு நேற்று திருப்பதிக்கு வந்தனர். ஆனால், அலிபிரி அருகே தரிசன டிக்கெட் உள்ளவர்களை மட்டுமே திருமலைக்கு அனுமதிக்க இயலும் என பாதுகாவலர்கள் கூறிவிட்டதால், செய்வதறியாது திகைத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD