காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் முக்கிய தீவிரவாதி உட்பட 5 பேர் சுட்டுக் கொலை https://ift.tt/CaMQmsvdO
ஸ்ரீநகர்: காஷ்மீரில் வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சண்டைகளில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் முக்கிய தீவிரவாதி மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் உள்ளிட்ட தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில் புல்வாமா மாவட்டம் நைரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் அங்கு போலீஸாரும் பாதுகாப்புப் படையினரும் கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஓரிடத்தில் மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் உள்ளூர் கமாண்டராக செயல்பட்டு வந்த முக்கிய தீவிரவாதி ஜாகித் வானி சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், உள்ளூர்வாசிகளான வாஹித் ரஷீத், இனாயதுல்லா மிர் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாதி கபீல் ஆகியோர் இந்த சண்டையில் கொல்லப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக