கனடா - அமெரிக்கா எல்லை அருகே பனியில் உறைந்து உயிரிழந்த இந்தியக் குடும்பம்
நியூயார்க்: கனடா - அமெரிக்கா எல்லை அருகே 4 பேர் அடங்கிய இந்தியக் குடும்பத்தினர் பனியில்உறைந்து உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
இந்தியாவைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் பல்தேவ்பாய் பட்டேல் (39).இவரது மனைவி வைஷாலிபென் ஜெகதீஷ் குமார் (37). இவர்களுக்கு மகள் விஹாங்கி ஜெகதீஷ்குமார் (11), மகன் தர்மிக் ஜெகதீஷ் குமார் (3) ஆகியோர் இருந்தனர். இவர்கள் 4 பேரும் ஒரு காரில் அமெரிக்கா - கனடா எல்லைப் பகுதியில் பனியில் உறைந்த நிலையில் சடலங்களாக கடந்த 22-ம் தேதி கண்டெடுக்கப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக