வாக்குறுதிப்படி கொல்லருக்கு கார் பரிசளித்த ஆனந்த் மஹிந்திரா https://ift.tt/34b7VW8
மும்பை: இரும்பு வேலை செய்யும் கொல்லர் ஒருவருக்கு தான் வாக்குறுதி அளித்தபடி பொலேரோ எஸ்யுவி காரை பரிசாக அளித்துள்ளார் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா.
மகாராஷ்டிர மாநிலம் சாங்லி பகுதியில் வசிக்கும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் லோஹர். இவர் கடந்த ஆண்டு தனது குழந்தைகள் ஆசைப்பட்டதற்காக இருக்கும் வளங்களைக் கொண்டு ஒரு காரை வடிவமைத்திருந்தார். அதாவது இரு சக்கர வாகன என்ஜின், ரிக்ஷா சக்கரங்கள் மற்றும்இவராக உருவாக்கிய ஸ்டியரிங் சக்கரம் இவற்றைக் கொண்டு நான்கு சக்கர வாகனத் தோற்றத்தில் வடிவமைத்த வாகனம் மிகவும் வைரலாக பரவியது. இதைப் பார்த்த ஆனந்த் மஹிந்திரா, இருக்கும் வளங்களைக் கொண்டு எவ்விதம் புதிய தயாரிப்புகளை வடிவமைப்பது என்பதற்கு இந்த கார் உருவாக்கம் ஊக்கமளிப்பதாக இருக்கும் என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். அந்த ஏழை கொல்லருக்கு பொலேரோ காரை பரிசளிக்க விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக