போலி தரிசன டிக்கெட்டு வழங்கி ஏமாற்றிய ஆட்டோ ஓட்டுநர் https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/29/large/761933.jpg
திருமலை: திருப்பதி ஏழுமலையானை ஆன்லைனில் முன்பதிவு செய்த பின்னரே சாதாரண பக்தர்கள் தரிசிக்கும் நடைமுறை உள்ளது. இதனை அறியாமல் பக்தர்கள் பலர் நேரடியாக திருப்பதிக்கு வந்து விடுகின்றனர். அவர்கள், ரயில், பஸ் நிலையம் மற்றும் தங்கும் விடுதிகளின் அருகே சுற்றித் திரியும் இடைத்தரகர்களை அணுகி, தரிசன டிக்கெட்டுக்காக பணத்தை கொடுத்து ஏமாறு கின்றனர்.
கடந்த 27-ம் தேதி புதுச்சேரியை சேர்ந்த சி.சுப்ரமணியம் மற்றும் அவரது நண்பர் 2 பேர் ரூ. 300ஆன்லைன் டிக்கெட்டுடன் வைகுண்ட காம்ப்ளக்ஸுக்குள் சென்றனர். அப்போது டிக்கெட்டை ஸ்கேன் செய்தபோது, அது போலி என்று தெரிய வந்தது. யாருடைய டிக்கெட்டையோ, ஊர், பெயர், ஆதார் எண்ணை மாற்றி இவர்களுக்கு கொடுத்தது தெரிய வந்தது. அதன் பின்னர் சுப்ரமணியத்திடம் விசாரணை நடத்தியதில், தரிசன டிக்கெட் இல்லாமல் வந்ததாகவும், பஸ் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் மவுன குமார் மற்றும் அவரது நண்பர் சவுந்தர் ஆகிய இருவரும் தரிசன டிக்கெட்டு ஏற்பாடு செய்து கொடுத்து ரூ.8,000 பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து திருமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து, அந்த இடைத்தரகர்களை தேடி வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக