கடலூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை- இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை https://ift.tt/nYmAu6f

கடலூர் மாவட்டம் கோதண்டராமபுரத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார் (31). கூலித்தொழிலாளியான இவர் தனியாக வசித்து வந்துள்ளார். கிடைக்கும் வேலைக்குச் செல்வதோடு அங்குள்ளவர்களிடம் உணவு வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார். கடந்த 21-8-2020 அன்று அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம் அவர் உணவு கேட்டுள்ளார். அச்சிறுமி அவருக்கு உணவு அளித்த போது அவரிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதுகுறித்து அச்சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கடலூர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நந்தகுமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் நீதிபதி எழிலரசி நேற்று நந்தகுமாருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சமூகநலத்துறை மூலமாக ரூ.2 லட்சம் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD