திருப்பதி அருகே பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து பத்திரிகையாளர் உட்பட 8 பேர் உயிரிழப்பு https://ift.tt/pYmqCDL

அனந்தபூர்: திருப்பதி அருகே நிச்சயதார்த்தத்துக்கு சென்றவர்களின் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பத்திரிகையாளர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் தர்மாவரத்தைச் சேர்ந்தவர்கள், திருச்சானூரில் நடக்கவிருந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் மாலை தனியார் பேருந்தில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர்.

மணமகனின் தந்தை, உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் பேருந்தில் இருந்தனர். இரவு 11 மணி அளவில் திருப்பதி - பீலேர் சாலையில் சென்று கொண்டிருந்த போது பாகராபேட்டை மலைப்பகுதியில் உள்ள ஒரு திருப்பத்தில் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. பேருந்தில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD