எஸ்எஸ்எல்சி தேர்வு தொடக்கம் - ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தடை: கர்நாடக அரசு https://ift.tt/RJ3P0Bj
பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் உள்ளிட்ட மத அடையாளத்தை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்துவர மாநில அரசு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று எஸ்எஸ்எல்சி தேர்வு தொடங்க உள்ளது. இதையடுத்து மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதுவதற்கு அனுமதி கிடையாது என்று கர்நாடக அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றம் உறுதி அவர் மேலும் கூறியதாவது: எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வுகள் நாளை (இன்று) தொடங்கவுள்ளன. எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு எழுத வருபவர் களும் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும். ஹிஜாப் அணிந்து வந்து தேர்வு எழுத தடை விதித்து கர்நாடக மாநில பள்ளி கல்வித்துறை நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதை நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக