கனடா நாட்டில் வசிப்பவரிடம் பெண் குரலில் பேசி ரூ.1.35 கோடி மோசடி செய்தவர் கைது https://ift.tt/SlcIsWD

சென்னை: ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்தவர் பச்சையப்பன் (42). கனடாவில் மனைவி, 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், விவாகரத்து கோரி வழக்குத் தொடர்ந்தனர்.
இந்நிலையில், பச்சையப்பன் மறுமணம் செய்ய முடிவு செய்தார். அதற்காக, இணையதளம் மூலம்திருமண தகவல் மையத்தில் பதிவுசெய்தார். இதையடுத்து, சென்னைபெரம்பூர் வெங்கட்ராமன் தெருவைச் சேர்ந்த செந்தில்பிரகாஷ் (42), பச்சையப்பனை தொடர்பு கொண்டு, “எனது தங்கைகணவரை இழந்துள்ளார். உங்களை அவருக்கு மிகவும் பிடித்துள்ளது. எனவே, உங்களை மறுமணம் செய்துகொள்ள விரும்புகிறார். உங்களுக்கு விருப்பமா?” என்று கேட்டுள்ளார். மேலும், தங்கையின் புகைப்படத்தையும், செல்போன் எண்ணையும் அனுப்பி வைத்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக