அரக்கோணம் அடுத்த சாலை கிராமத்தில் தம்பதியை கொலை செய்து முட்புதரில் உடல் வீச்சு: 5 தனிப்படைகள் விசாரணை https://ift.tt/qWvHLlG
அரக்கோணம்: அரக்கோணம் அருகே தம்பதியை கொலை செய்து உடலை சாலை யோர முட்புதரில் மர்ம நபர்கள் வீசிச்சென்றுள்ளனர். இது தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருவதாக டிஐஜி ஆனி விஜயா தெரிவித்துள்ளார்.
அரக்கோணம் அடுத்த கைலாசபுரம் சாலை கிராமத்தில் உள்ள சாலையோர முட்புதரில் ஒரு ஆண் மற்றும் பெண் உடல்கள் இருப்பதாக அரக்கோணம் கிராமிய காவல் துறையினருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. அதன்பேரில், அரக்கோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ், ஆய்வாளர் சேதுபதி மற்றும் காவலர்கள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் காஞ்சிபுரம் புஞ்சை அரசந் தாங்கல் பகுதியைச் சேர்ந்த பட்டு நெசவு தொழிலாளி மாணிக்கம் (52), அவரது மனைவி ராணி (47) என்பது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக