தட்சிணா மூர்த்தி நிலை இனி? - சிங்கப்பூரில் மரண தண்டனைக்கு எதிராக ஓங்கி ஒலிக்கும் இளம் குரல்கள்!

தன் மே க்யூயானும் அவரது நண்பர்களும் சமீபத்தில் சிங்கப்பூர் அதிபருக்கு கடிதம் ஓன்றை எழுதியிருந்தனர். அக்கடிதத்தில், ‘44 கிராம் ஹெராயின் (மூன்று டேபிள்ஸ்பூன் அளவு) கடத்திய குற்றத்திற்காக மரணத் தண்டனை விதிக்கப்பட்டு 7 ஆண்டுகள் சிறையில் உள்ள தட்சிணா மூர்த்தியின் மரண தண்டனை தடை செய்ய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

சிங்கப்பூரில் மரணத் தண்டனைகளுக்கு எதிரான போராட்டங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. சிங்கப்பூர் தமிழரான நாகேந்திரன் தர்மலிங்கத்திற்கு போதை பொருட்கள் கடத்தல் குற்றத்திற்காக மரணத் தண்டனை விதிக்கப்பட்டது. அறிவுசார் குறைபாடுடைய நாகேந்திரன் தர்மலிங்கத்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து சிங்கப்பூரில் இளைஞர்கள் பலரும் போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடத்தன. சர்வதேச அளவில் எதிர்ப்புக் குரல்களும் பதிவு செய்யப்பட்டன.

நாகேந்திரன் அறிவுசார் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி என அவர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. எனினும், அதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என்று நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. இறுதியில் கடந்த மாதம் 27-ஆம் தேதி நாகேந்திரன் தர்மலிங்கத்திற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD