இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான ரயில் சேவை மீண்டும் தொடக்கம்
கொல்கத்தா: சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான பயணிகள் ரயில் சேவை ஆரம்பமாகி உள்ளது. கரோனா தொற்று காலமாக ரயில் சேவை தடைப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு ரயில்வே சார்பில் இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளுக்கு இடையே மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து வங்கதேச நாட்டிற்கு இயக்கப்பட்டு வருகிறது. கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020-க்கு பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான ரயில் சேவை முடங்கி இருந்தது. இந்நிலையில், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இப்போது ரயில் சேவை தொடங்கியுள்ளது. இதனை கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக