'மனதின் குரல்' நிகழ்ச்சியில் தஞ்சை மகளிர் சுயஉதவி குழுவினரை பாராட்டிய பிரதமர் மோடி https://ift.tt/EAR3Mwi

புதுடெல்லி: தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை அனுப்பிவைத்த தஞ்சை தாரகைகள் மகளிர் சுயஉதவிக் குழுவினரை, ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டி பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சி மூலம் அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதன்படி, இந்த மாதத்துக்கான ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது. சில தினங்களுக்கு முன்பு நம்நாடு புதிய சாதனை படைத்திருக்கிறது. கிரிக்கெட் போட்டியில் நம்வீரர்கள் சதம் அடித்தால் நீங்கள்அனைவரும் மகிழ்ச்சி அடைவீர்கள். ஆனால், இந்தியா மற்றொரு துறையில் சதம் அடித்துள்ளது. கடந்த 5-ம் தேதி நம் நாட்டின் யூனிகார்ன்கள் எண்ணிக்கை 100-ஐ தொட்டது. ஒரு யூனிகார்ன் என்பது ரூ.7,500 கோடி மதிப்புள்ள ஸ்டார்ட் அப் நிறுவனமாகும். மொத்த யூனிகார்ன்களின் மதிப்பு சுமார் ரூ.25 லட்சம் கோடியாகும். இது இந்தியர்களுக்கு பெருமை தரும் விஷயமாகும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD