கோயில் சிலைகளை புனரமைக்க நிதி திரட்டிய விவகாரம்: யூடியூபர் வங்கி கணக்கை முடக்க காவல்துறை முடிவு https://ift.tt/Gbd7rmR
ஆவடி: சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயிலின் உப கோயில்களின் சிலைகளை புனரமைப்பதற்கு நிதி திரட்டியதாக கைதான யூடியூபர் கார்த்திக் கோபிநாத்தின் வங்கி கணக்கை முடக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயிலின் உப கோயில்களில் உள்ளபழுதான சிலைகளை புனரமைப்பதாக கூறி, ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டையைச் சேர்ந்தகார்த்திக் கோபிநாத் என்ற யூடியூபர், சமூக வலை தளம் மூலம் பொதுமக்களிடம் நிதி திரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு போலீஸார், நேற்று முன்தினம் கார்த்திக் கோபிநாத்தை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக