மகாராஷ்டிராவில் சிவசேனா அரசுக்கு நெருக்கடி - அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேருக்கு நோட்டீஸ் https://ift.tt/TuHnYaK
மும்பை: சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ.க்கள் 16 பேருக்கு நேற்று தகுதிநீக்க நோட்டீஸ் அனுப்பிய மகாராஷ்டிரா துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வல், நாளை மாலைக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறித்து, பாஜகவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்கக் கோரி சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ.க்கள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் போர்க்கொடி தூக்கினர். அவர்கள் சுயேச்சை எம்எல்ஏ.க்கள் சிலர் ஆதரவுடன் அசாம் மாநிலம் குவாஹாட்டி நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர். இதையடுத்து, சிவசேனா கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏ.க்கள் 16 பேரை தகுதி நீக்கம் செய்யும்படி மகாராஷ்டிர துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வலிடம், சிவசேனா கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக