சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை: மதுரை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு https://ift.tt/vGjd9ZK
மதுரை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேருக்கு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் காவல் நிலையத்தில் கடந்த 2017-ல் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக முள்ளிப்பள்ளம் நாச்சியப்பன் (47), தென்கரை மணிகண்டன்(28) ஆகிய இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை இன்று விசாரித்த மதுரை மாவட்ட சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம், குற்றம் புரிந்த நாச்சியப்பனுக்கு ஆயுள் தண்டனை, ரூ. 6 ஆயிரம் அபராதமும், மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.16 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக