6 மாநில இடைத் தேர்தல் முடிவுகள்: உ.பி, திரிபுராவில் பாஜக வெற்றி; பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி தோல்வி https://ift.tt/XGbqICp

புதுடெல்லி: பஞ்சாப், உத்தர பிரதேசம், ஆந்திரா, டெல்லி, ஜார்கண்ட், திரிபுரா ஆகிய 6 மாநிலங்களில், 3 மக்களவை தொகுதிகளுக்கும், 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நடந்த இடைத் தேர்தலில் பா.ஜ 2 மக்களவை தொகுதிகளிலும், 3 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வென்றது. காங்கிரஸ் ஜார்கண்ட், திரிபுரா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு சட்டப்பேரவை தொகுதியில் வென்றது. பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் ராஜினாமா செய்த சங்ரூர் மக்களவை தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது.

உத்தரப் பிரதேசம் சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்காக, ராம்பூர் மக்களவை தொகுதி எம்.பி பதவியை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும், அசம்கர் மக்களவை தொகுதி எம்.பி பதவியை மூத்த தலைவர் அசம் கானும் ராஜினாமா செய்தனர். இதனால் அங்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. சமாஜ்வாதியின் கோட்டையாக இருந்து ராம்பூர் தொகுதியில் பா.ஜ வேட்பாளர் கான்ஷ்யாம் லோதி 42,000 வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி வேட்பாளர் அசிம் ராஜாவை தோற்கடித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD