ராஜ்யசபா சீட், கவர்னர் பதவிக்கு 100 கோடி ரூபாய் - மோசடியில் ஈடுபட்ட நால்வரை கைது செய்த சிபிஐ https://ift.tt/zbTjyvk
புதுடெல்லி: 100 கோடி ரூபாய்க்கு ராஜ்யசபா சீட் மற்றும் கவர்னர் பதவி வாங்கி தருவதாக மோசடி செய்ய இருந்த கும்பலை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ கைது செய்துள்ளது.
ராஜ்யசபா சீட், கவர்னர் பதவி போன்ற அரசாங்கத்தில் உயர் பதவிகளை பெற்றுவருவதாக கூறி, அவற்றுக்கு 100 கோடி ரூபாய் பெற முயன்ற நான்கு பேரை சிபிஐ அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. பணம் கைமாறுவதற்கு சற்று முன்பு நான்கு பேரை கைது செய்துள்ளனர். மகாராஷ்டிராவைச் சேர்ந்த கர்மலகர் பிரேம்குமார் பண்ட்கர், கர்நாடகாவைச் சேர்ந்த ரவீந்திர வித்தல் நாயக் மற்றும் டெல்லியைச் சேர்ந்த மகேந்திர பால் அரோரா மற்றும் அபிஷேக் பூரா ஆகியோர் கைது செய்யப்பட்டவர்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக