ரூ.5,200 கோடி மதிப்பில் பசுமை ஆற்றல் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் - சோலார் பேனல் தொடர்பான இணையதளமும் அறிமுகம் https://ift.tt/MaFeXir
புதுடெல்லி: மத்திய அரசின் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ரூ.5,200 கோடி மதிப்பிலான பசுமை ஆற்றல் திட்டங்களுக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். மேலும், மின் துறையின் செயல்பாடுகளையும் நிதி நிலைமையையும் மேம்படுத்தும் நோக்கில் ‘புதுப்பிக்கப்பட்ட விநியோக துறை திட்ட’த்தை அவர் தொடங்கி வைத்தார். இந்தத்திட்டத்தின் கீழ், மின் துறையை நவீனப்படுத்தவும், அதன் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் 2025-26 நிதி ஆண்டு வரை ரூ.3 லட்சம் கோடி செலவிடப்பட உள்ளது.
பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகான கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் மின்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை எடுத்துக்காட்டும் விதமாக ‘ஒளிமயமான இந்தியா, பிரகாசமான எதிர்காலம் @2047’ என்ற நிகழ்ச்சி ஜூலை 25-ல் தொடங்கியது. நேற்றோடு இந்த நிகழ்ச்சி முடிவடைந்தது. நிகழ்ச்சியின் இறுதி நாளான நேற்று பிரதமர் மோடி காணொலி வாயிலாக பல்வேறு பசுமை ஆற்றல் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக