கேரள மருத்துவக் கல்லூரி முறைகேடு - பிரிட்டன் செல்ல முயன்ற பேராயர் தடுத்து நிறுத்தம் https://ift.tt/fmjYs9v

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் டாக்டர் சோமர்வெல் மெமோரியல் சிஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரி காரகோணம் மருத்துவக் கல்லூரி என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த கல்லூரியில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையின்போது அதிக அளவில் பணம் பெறப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த வழக்கை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கல்லூரியின் நிர்வாகியாகவும், தலைவராகவும் செயல்பட்டு வரும் பேராயர் ஏ.தர்மராஜ் ரசலம் நேற்று திருவனந்தபுரம் விமானநிலையத்திலிருந்து பிரிட்டன் செல்ல புறப்பட்டார். அப்போது அமலாக்கத் துறை கோரிக்கையின் பேரில் அவரை விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர் பிரிட்டன் செல்லாமல் கல்லூரிக்குத் திரும்பினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD