காஷ்மீர் விடுதி அறைகளில் கிரிக்கெட் பார்ப்பதற்கு தடை: ஸ்ரீநகர் என்ஐடி உத்தரவு https://ift.tt/CNTQjLe
ஸ்ரீநகர்: இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியைப் பார்க்க நாடு முழுவதிலும் உள்ள இளைஞர்கள் ஆர்வம் கொண்டிருந்தனர். இந்நிலையில், இந்த கிரிக்கெட் போட்டியை விடுதி அறையில் டி.வி.யில் கும்பலாக பார்க்கும் மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (என்ஐடி) அறிவித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக