மியான்மர் எல்லையில் ரூ.168 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல் https://ift.tt/q8bwhTA
ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான ரகசியத் தகவலின் பேரில் சாம்பை மாவட்டத்தின் மெல்புக் கிராமத்தில் மாநில போலீஸாரும் அசாம் ரைபில்ஸ் படையினரும் நேற்று முன்தினம் வாகன சோதனை மேற்கொண்டனர்.
இதில் ஒரு வாகனத்தில் பல இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மெத்தாம் பேட்டமைன் என்ற போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். 55.80 கிலோ எடை கொண்ட இந்த மாத்திரைகளின் மதிப்பு ரூ.167.86 கோடியாகும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக