ம.பி.யில் கர்பா நடன நிகழ்ச்சிக்கு வருவோரின் அடையாள அட்டையை பரிசோதிக்க உத்தரவு https://ift.tt/x76hqmY
போபால்: இந்து பெண்களை, சிறுபான்மையின இளைஞர்கள் காதலித்து, அவர்களை திருமணத்தின்போது மதம் மாற்றுவதாக வலதுசாரி தலைவர்கள் கூறுகின்றனர். இது ‘லவ் ஜிகாத்’ என அழைக்கப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்களுக்கு இந்து பண்டிகைகளின் கொண்டாட்டங்கள் வாய்ப்பாக அமைந்துவிடுகின்றன எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் மத்தியப் பிரதேச கலாச்சாரத்துறை அமைச்சர் உஷா தாக்குர் கடந்த 8-ம் தேதி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பேசியபோது, ‘லவ் ஜிகாத்தை’ தடுக்க நவராத்திரி விழாக்களில் கர்பா நடன நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில், அடையாள அட்டைகளை பரிசோதித்தபின் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும். அடையாள அட்டை இல்லாமல் யாரையும் அனுமதிக்க கூடாது’’ என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக